குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Wednesday, February 20, 2013

குலாலர் குலவள்ளல் A.S.சுப்புராஜ்

குலாலர்குலவள்ளல் A.S.சுப்புராஜ்,எம்.எல்.ஏ
 
  A.S.சுப்புராஜ் 1914ஆம் வருடம் ஜுலை மாதம் 28ஆம் போடிநாயக்கனூர் பங்கஜம் குடுபத்தில் 


பிறந்த இவர் (ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி)விக்டோரியா மேல்நிலைப்பள்ளியில் கல்வி

 கற்றார்.போடிநாயக்கனூர் அழகண்ணன் சொட்டியார்,எம்.எல்.ஸி முன்னாள் தென்னிந்திய

குலாலர் சங்கத் தலைவரின் பேரனும் அ.சுப்பன் சொட்டியாரின் மகனும் ஆவார்.

ஆற்றிய பணிகள்


 • உத்தம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் 1952-1957 

• போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் 1957-1963

• போடிநாயக்கனூர் நகர்மன்ற தலைவர்

• நடுவராயத்தின் தலைவர் (Bench Court)

• வியாபாரிகள் சங்கத்தலைவர்

• கூட்டுறவு வீடு கட்ட்டமனை சமூகத்தலைவர்

• விவசாய வங்கி தலைவர்

• நில அடமான வங்கி தலைவர்

• கூட்டுறவு விற்பனையக சங்கத்தலைவர்

• சேதுராமன் நினைவு குழந்தைகள் இல்லத்தலைவர்

• நாகம்மாள் விடுதி தலைவர்

• தென்னிந்திய ஏல விவசாயிகள் சங்கத்தலைவர் போடி

• போடிநாயக்கனூர் பிரந்திய தென்னிந்திய ஏல விவசாயிகள் சங்கத்தலைவ
ர்
 
• சீதாலட்சுமி மில் இயக்குநர்


தர்மகர்த்தா-இராமேஸ்வரம் தேவாஸ்தானம் இராமேஸ்வரம்

செயலாளர் 

• ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி(விகடோரியா நினைவு மேல்நிலைப்பள்ளி) 

போடிநாயக்கனூர்

• பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி போடிநாயக்கனூர்

உறுப்பினர்

• தக்கார் பாபா வித்தியாலயம் சென்னை

• மதுரை கல்லூரி நிர்வாக குழு

• காந்திகிராம பல்கலைகழக நிர்வாக குழு



நாட்டுப்பணி
இந்தியா நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றார்.பெண்கல்விக்காக பாடுபட்டார். தமிழ்நாட்டின் விவாசயம் மின் உற்பத்தி, தொழிற்சாலைகள் மேம்படுத்த தமிழக முதல்வர் 1960ல் தமிழக நிதியமைச்சர் C.சுப்பிரமணியம் தலைமையில் அ.சு.சுப்புராஜ், C.R.ராமசாமி ஆகியோர் கொண்ட குழுவை லண்டன்(UK) அனுப்பினார். அன்றைய மதுரை மாவட்ட மக்களின் தொழில் வளத்தை மேம்படுத்த தேனியில் போஜ்ஜாராஜ் மில்லை தோற்றுவித்து இந்தியா நாட்டின் முதல் பிரதமர் நேரு அவர்களால் திறக்க செய்தார். போடி முதல் போடிமெட்டு 23கி.மீ மலைசாலை திட்டத்தை 23.40இலட்சத்தில் நிறைவேற்றினார் போடிமெட்டு மலைசாலை அமைக்க அரசின் திட்டமதிப்பீடு அதிகமான போது தன் சொந்த செலவில் தானே முன்னின்று போடிமெட்டு மலைசாலை நிறைவேற்றிய வள்ளல் . இன்று தொண்டி-கொச்சி தேசியநெடுஞ்சாலையாக உள்ளது. போடிநாயக்கனூரில் அ.சு.சுப்புராஜ் சத்திரத்தை நிறுவி பசி என்று வந்தவருக்கு உணவளித்த பாரி வள்ளல்.அனதைக்குழந்தைகளை காக்க போடிநகரில் சேதுராமன் நினைவு குழந்தைகள் இல்லத்தை நிறுவினார் இன்று A.S. சுப்புராஜ் நினைவு குழந்தைகள் இல்லமாக சீறும் சிறப்புமாக இயங்கி வருகிறது.

குலாலர் சமுதயத்திற்கு ஆற்றிய பணிகள்
• B.C பிரிவில் இருந்த குலாலர் சமுதயத்தை MBC பிரிவிற்கு மற்றினார்
• இராமேஸ்வரம்,பழநி,திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர் போன்ற இடங்களில் குலாலர் மண்டபங்களை நிறுவினார்.
• தேனிமாவட்டம் வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா காலங்களில் தீச்சட்டி,மண்பாண்டங்கள் விற்க்க குலாலர் பொதுமனையை ஏற்படுத்த இடம் வழங்கினார். போடிநாயக்கனூரில் குலாலர்பாளைத்தில் வசிக்க குலாலர் மக்களுக்கு தன் சொந்தநிலத்தை வழங்கினார். போடிநாயக்கனூரில் குலாலர் மக்களுக்காக மண்பாண்டங்கள் விற்க்க செய்ய இடம்,சுடுகாடு, கோவிலுக்கு இடம் என 3.7.1944ல் குலாலர் ஜாதி பொதுமைக்கு தானமாக வழங்கினார். மற்ற சமுகத்தினருக்கும் தன் ஏராளமான சொத்துக்களை தானமாக வழங்கினார். “ தோன்றின் புகழ்ளோடு தோன்றுக” என்ற திருவள்ளுவரின் குறளுக்கேற்ப வாழ்ந்தார். 1963வருடம் பிப்ரவரி மாதம் 22ம் நாள் வெள்ளிக்கிழமை 3.30 மணிக்கு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்.மிக குறுகிய காலமே வாழ்தாலும் இவர் செய்த அறப்பணிகளால் மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறது இவரது புகழ்.
தொகுப்பு

FLOWERDIMAND
,
குலாலர் ஜாதி பொதுமை
,
குலாலர்பாளையம் ,

போடிநாயக்கனூர்,

தேனிமாவட்டம்.