குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, June 1, 2013

வீரப் பெண்மணி குயத்தியார்


வீரப் பெண்மணி வெண்ணிக் குயத்தியார்


புறநானூற்றில் புகைழ்பெற்ற நம் குலபெண்மணி வெண்ணிக் குயத்தியார்
நம் குலால மரபில் மங்கையர் பலர் மங்காப் புகழுடன் எங்கும் 
ஒளிபெற்று விளங்கினர் என்பதை இலக்கியங்களிலே காண முடிகிறது 
குலால குல மாணிக்கங்கள் தவறு கண்டவிடத்துக் தட்டிக் கேட்கும் உள்ளம் 
கொண்டவர்களாக விளங்கினர்.
வெண்ணிக் குயத்தியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி 
குலாலர் குலத்தைச் சேர்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66 
பாடலாக அமைகிறது. இதர பாடல்கள் கிடைக்கவில்லை.
நம் குல பெண்மணி வெண்ணிக் குயத்தியார் இவர் வெண்ணி என்னும் ஊரிலே 
தஞ்சை மாவட்ட நீடாமங்கலத்துக்கு மேற்கே உள்ள ஓர் ஊர் வெண்ணி. இது 
தேவாரப் பாடல் பெற்ற தலம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் "சங்கப் 
புலவர் கோயில் " 
என்னும் ஒரு பகுதி உண்டு அதில் சங்ககாலப் புலவர் பெருமக்களின் 
திருவடிவங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன அச்சிலைகளில் முதலில் இடம் 
பெறுபவர் இறையனார் ,அடுத்தது இடம் பெற்றிருப்பவர் வெண்ணிக் 
குயத்தியார் புலவர் வரிசையில் முதல் இடம் நம்குலப் பெண்மணி 
அடைந்திருக்கிறார்,

வெண்ணிக் குயத்தியார் பாடல் 

* பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
* திணை: வாகை. துறை: அரச வாகை.

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?