குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Sunday, June 8, 2014

மானாமதுரையில் கடம் தயாரிக்கும் குலாலன்






கடம் (இசைக்கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடம்
கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.
சில வித்துவான்கள் கடத்தைத் தூக்கிப் போட்டு அது கீழே வரும்போது தாளத்திற்கேற்ப ஒலி எழுப்பி இரசிகர்களை பிரமிக்க வைப்பார்கள்.
கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.
வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும் நடைபெறும். மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்த தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்.

கடம் தயாரிப்பு[தொகு]

தமிழ் நாடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை மட்பாண்ட தயாரிப்புகளுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தயாரிக்கப்படும் கடத்துக்கு தனிச் சிறப்பு உண்டு.
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமிவிருது வழங்கி கௌரவித்துள்ளது. [1]

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற ஊராகும். குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் இசைக் கருவியான கடத்துக்கு தனி மவுசு உண்டு. இக்கடத்திலிருந்து கர்நாடக இசைக்கலைஞர்கள் விரும்பும் ஒலி கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை பகுதியில் கிடைக்கும் மண்ணின் உறுதித்தன்மையே இதற்கு காரணம். இதனால் கர்நாடக இசைக் கலைஞர்கள் மானாமதுரையில் ஆர்டர் கொடுத்து கடம் வாங்கிச் செல்கின்றனர். மேலும் இங்கு தயாரிக்கப்படும் கடம் கடல் கடந்து உலக நாடுகளிலும் தனது இசையை ஒலித்து வருகிறது.
தற்போது மானாமதுரையில் கடம் தயாரிப்பில் ஒரு குடும்பத்தினர் மட்டுமே பாரம்பரியமாக ஈடுபட்டு உள்ளனர். மானாமதுரை குலாலர் தெருவில் வசிக்கும் அக்குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த கேசவன் மனைவி மீனாட்சி மத்திய அரசின் சங்கீத நாடக அகடாமி சார்பில் வழங்கப்படும்


No comments: