குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, March 24, 2015

உடையார் என்று அழைக்கப்படும் குலாலர்கள் அதற்கான விளக்கம்








உடையார் என்று அழைக்கப்படும் குலாலர்கள் அதற்கான விளக்கம்


குலாலர்கள் என்று அழைக்கப்படும் குயவர் பெருமக்களும் தம்மை மண் உடையார் என்று அழைத்துக்கொள்வர். வேட்கோவர்,வேளார் என்ற பெயர்களில் உள்ள வேள் என்பது மண்ணைக் குறிக்கும்.மண் கொண்டு தொழில் செய்யும் உரிமை கொண்டோர் என்ற பதத்தில் மண்ணுடையார் என்றும் கூட குயவர்கள் தம்மை அழைத்துக் கொண்டனர்.அதனாலேயே உடையார் என்று ஜாதிப் பட்டம் யாரும் பொதுவாகக் கூறினால் குயவரா நீங்கள் என்று தான் முதலில் கேட்பார்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில்,.. மண்ணினால் ஆன வேலை செய்வதால் வேட்கோவர்  தம்மை மண் உடையார் என்று கூறிக்கொண்டனர்.மேலும் மைசூர் அரசர்களான உடையார்கள்,உடையா பட்டம் கொண்ட குலாலர்கள்தான்

பெயர் மாற்றம்





குலாலர் இளைஞர் மகாசபை என்ற நமது இயக்கத்தின் பெயர் ஒரு சில காரணங்ககள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது புதிய பெயர் வீர வேந்தன் சாலிவாகனன் இளைஞர் மன்றம் 
முதல் கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் இன்று துவங்குகிறது தொடர்புக்கு 
09366156565 09933232655

மண்பாண்ட தொழில் பாதுகாக்கப்படும் பசுமை தீர்ப்பாய தலைவர் தகவல்






''மண்பாண்ட தொழிலாளர் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் சுவேந்திரகுமார் கூறினார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகியம்மன், மடப்புரம் காளி கோயில்களில் தரிசனம் செய்த அவர் கூறியதாவது:
இயற்கை வளத்தை பாதுகாக்கவே மண், மணல் எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதனால் மானாமதுரை உட்பட பல இடங்களில் மண்பாண்ட தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. மண்பாண்ட தொழிலாளர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் சுவேந்திரகுமார்  அவர்களுக்கு குலாலர் தளம் சார்பாக நன்றியை தேரிவித்து கொள்கிறோம்