குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, July 8, 2014

குலாலர் இன மக்களுக்கு ஒரெ ஒரு பிரச்சனை

தமிழ் நாட்டில் உள்ள குலாலர் இன மக்களுக்கு ஒரெ ஒரு பிரச்சனை என்னவென்றால் பானை செய்ய ( வண்டல் மண் ) எடுக்கும் போது அதிகாரிகள் பிடித்து கொண்டு 25000 35000 ரூபாய் கேட்கிரார்கள்
இது தினமும் அரங்கேறீக்கொண்டுதான் இருக்கிறது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் 

விடிவு காலம் உண்டா சமுதாயத்தின் அடிமட்ட மக்களின்
தேவைகளை அறியாத தலைவரும் ஒரு தலைவரா

பிரச்சினைக்கு உரிய திர்வு கான நாம் என்ன செய்யப்போகிறோம்?

திர்வு
ஒருலச்சம் குலாலர்களை திரட்டி மாநில அளவில் போராட்டம் நடத்தினால் திர்வு ??

மண்பாண்ட தொழிலாளர் கணக்கெடுப்பு

மண்பாண்ட தொழிலாளர் கணக்கெடுப்பு ஜூலை 10ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக் காலங்களில் தமிழக அரசால் பராமரிப்புத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்வாரிய அலுவலர், தொழிலாளர் நல அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் வருகிற ஜூலை 10ஆம் தேதி வரை களஆய்வு செய்து மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கிட உள்ளனர்.

இந்த திட்டத்தின்கீழ் மண்பாண்ட தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த நபர்கள், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த மண்பாண்ட தொழில் செய்யும் உறுப்பினர்கள், இதர மண்பாண்ட தொழில் செய்வோர் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த தொழிலாளர் நல அலுவலர் அல்லது கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்

வேளார், குயவர், குலாலர், கும்பரர், கும்மரி, கும்கர்,பிராஜபதி, மண்ணுடையார், உடையார், பத்தர் என பல பெயர்களில் அழைக்கபடும் நமது சமூகத்தினரின் கலை பண்பாடு மற்றும் வரலாறு தகவல்கள், அன்றாட நிகழ்வுகள், கல்வி பற்றிய செய்திகள், சங்கங்களின் தகவல்கள், பறந்துப்பட்டிருக்கும் நம் உறவுகளின் தகவல்கள், சமூக தொடர்புகள், வேலை வாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை தருவதே இந்த

குலாலர் தளம்நோக்கமாகும்.

நமது மூன்று ஆசைகள்

நமது மூன்று ஆசைகள்


தமிழ் நாட்டில் உள்ள அனைத்து குலாலர்கள் ஒருமை படுத்த. வேண்டும்

நமது குலாலர் சமுதாயதின் குலதெய்வமான. மாவீரன் சாலியவாகனனுக்கு தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் 

சித்திரை 1. அவருக்கு குருபூசை நடத்த வேண்டும் 

உங்களுடைய கருத்து

உறவுகளுக்கு வணக்கம்

என் இனிய உறவுகளுக்கு வணக்கம் 

சிதைந்து கிடக்கும் நம் குலாலர் வரலாறு

மறைக்கப்படாமல் இருக்க அதை பறைசாற்றுவது நமது கடமை ஆகும் .வரலாறு காப்பது நம் பெற்றோரை காப்பதற்கு சமம் 

நம் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள 
நாம் குலாலர் சமுதாயதின் தலைவர்களின் முழுமையான வரலாறு புத்தகம் வெளியிடுவது முடிவு செய்யப்பட்டது
எத்தனைபேருக்கு வேண்டும் என்பதை சொல்லுங்கள்
உங்கள் முகவரிகு அனுப்பப்படும்

அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள மழைக் கால நிவாரணத் தொகையை வயது வித்தியாசமின்றி அனைத்து மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று, அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழகம், குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச் சங்க மாநிலப் பொதுக் குழு ஆலோசனை கூட்டம் வளையப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிவம் வரவேற்றார்.

நிறுவனத் தலைவர் தியாகராஜன், மாநிலத் தலைவர் ஆறுமுகம், மாநில நிர்வாகிகள் கலியமூர்த்தி, பிச்சை, வைரப்பெருமாள், ராதாகிருஷ்ணன், மாவட்டத் தொழில்சங்கத் தலைவர் சரவணன், கலிங்கசெல்வம், பரமசிவம், இலக்கிய அணித் தலைவர் பிரபு, மணிகண்டன், கலைவாணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

இதில், மண்பாண்டத் தொழிலாளர் நலன் கருதி மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் அந்தத் தொகையை வயது வித்தியசமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்பாண்டம், செங்கல், ஓடு, மண் மொம்மைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு இலவசமாக 80 யூனிட் களிமண் வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட ஏழூர் அகரம், அரூர், பிடாரமங்களம், செல்லிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் களிமண்களை மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்டப் பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.